Sunday, December 31, 2017

EN PAAVAM THEERTHA NAALAIYE TAMIL LYRICS


1. என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்
பல்லவி
இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
2. இம்மானுவேல் இப்பாவியைத்
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய் சேர்த்தனர்

3. என் உள்ளமே உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
ஆருயிர் தந்த நாதரை
ஓர்காலும் விட்டு நீங்கிடாய்

4. ஆட்கொண்ட நாதா! எந்தனை
நாடோறும் தத்தம் செய்குவேன்
பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்

No comments:

Post a Comment

KROTHTHAPAATA PAADANU RAARAE KROTHTHA TELUGU LYRICS

క్రొత్తపాట పాడను రారే - క్రొత్త రూపు నొందను రారే హల్లెలూయ హల్లెలూయ పాట పాడెదన్‌ ప్రభుయేసుకే స్తోత్రం మన రాజుకే స్తోత్రం (2) 1.శృంగ నాధం...