Sunday, December 31, 2017
ENATHU KARTHARIN RAJAREEGA NAAL TAMIL LYRICS
எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ ?
அனுபல்லவி
மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே --- எனது
சரணங்கள்
1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,
ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே --- எனது
2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே ;
பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே --- எனது
3. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே ,
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏந்திப் பாடுமே ;
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே ;
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே --- எனது
4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே ;
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே ;
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே ;
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே --- எனது
Subscribe to:
Post Comments (Atom)
KROTHTHAPAATA PAADANU RAARAE KROTHTHA TELUGU LYRICS
క్రొత్తపాట పాడను రారే - క్రొత్త రూపు నొందను రారే హల్లెలూయ హల్లెలూయ పాట పాడెదన్ ప్రభుయేసుకే స్తోత్రం మన రాజుకే స్తోత్రం (2) 1.శృంగ నాధం...
-
ఇంత కాలం నీదు కృపలో కాచిన దేవా (2) ఇకను కూడా మాకు తోడు నీడ నీవే కదా (2) ||ఇంత కాలం|| ఎన్ని ఏళ్ళు గడచినా – ఎన్ని తరాలు మారినా (2) మారని వ...
-
ബലഹീനതയില് ബലമേകി ബലവാനായോന് നടത്തിടുന്നു (2) കൃപയാലെ കൃപയാലെ കൃപയാലനുദിനവും (2) (ബലഹീനത..) 1 എന്റെ കൃപ നിനക്കുമ...
-
పల్లవి: పరలోకమే నా స్వాస్థ్యము - ఎపుడు గాంతునో నా ప్రియ యేసుని - నేనెపుడు గాంతునో 1. ఆకలిదప్పులు దుఃఖము - మనోవేదన లేదచ్చట పరమ మకుటము పొం...
No comments:
Post a Comment