Friday, December 29, 2017

KARAM PIDITHENNAI VALI NADATHUM TAMIL LYRICS


1. கரம் பிடித்தென்னை வழி நடத்தும்
இயேசுவே என்னை நான் ஒப்புவிக்கிறேன் (2)
பாதை தெரியாத பாவி நானைய்யா
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2)

இயேசுவே இரங்குமே
வழி நடத்துமே (2)

2. பாவ இருள் நீக்கி வழி நடத்தும்
பாவக்கறை போக்கி சுத்திகரியும் (2)
செம்பாவம் அகற்றி வெண்மையாக்குமே
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே

3. நேசரே என்னை நீர் வழி நடத்தும்
காருண்யத்தைக் காட்டி அழைத்துச் செல்லும் (2)
உறைந்த மழையைப் போல் வெண்மையாக்குமே
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே

4. தீபம் காட்டி என்னை வழி நடத்தும்
ஆவியை கொடுத்துத் தேற்றியருளும் (2)
வெளிச்சத்தின் பாதையில் அழைத்துச் சென்று
என்னை உம் சித்தப்படி நீர் வழி நடத்தும் (2) --- இயேசுவே

No comments:

Post a Comment

KROTHTHAPAATA PAADANU RAARAE KROTHTHA TELUGU LYRICS

క్రొత్తపాట పాడను రారే - క్రొత్త రూపు నొందను రారే హల్లెలూయ హల్లెలూయ పాట పాడెదన్‌ ప్రభుయేసుకే స్తోత్రం మన రాజుకే స్తోత్రం (2) 1.శృంగ నాధం...